அம்மா மகன் கட்டாயம் படிங்க புடிகளான சத்தியமா என சொன்னாலும் சைரன் ப

அப்பு என்ற 7 வயது சிறுவன்
படுக்கையில் படுத்துக் கொண்டே தன்
தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி..

அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில
மட்டும் நிறைய
கடிக்கவருது....அது எப்ப
அம்மா தூங்கும்?
அம்மா : அது துக்கம்
வரும்போது தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
கொசுக்கு வீடு எங்கம்மா?
அதுக்கு வீடே இல்லை...
ஏம்மா வீடே இல்லை?
அது ரொம்ப சின்னதா இருக்கா அதான்
வீடு இல்ல...
நான் ரொம்ப சின்னபிள்ளைதானே எனக்கு வீடு இருக்கே .....
இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப
சின்னதா இருக்குமா அதான்
அதுக்கு வீடு இல்ல...
கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர்
வைச்சது?
கடவுள்...
கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
கடிக்காது...
ஏன்மா கடிக்காது?
கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்போ கடவுளுக்கு கோவம்
வருமா அம்மா ?
வரும். தப்பு செய்தா கடவுள்
அடிப்பாரு...
கடவுள் நல்லவராம்மா?
ரொம்ப நல்லவர்....
அப்புறம்ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அது அப்படித்தான் நீ தூங்கு...
கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அதுக்கு பசிக்குது...
கொசு இட்லி சாப்பிடுமா?
அதெல்லாம் பிடிக்காது...
கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
ஒரே ஒரு கேள்வி மம்மி?
கேட்டுத் தொலை
கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அதுக்கு பல்லே இல்லை...
பிறகு எப்படி கடிக்கும்?
அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப
நீ வாய மூடாட்டி பேய்கிட்ட
புடிச்சுக் கொடுத்திடுவேன்...
பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
நாம தூங்கும் போது வாயும்
தூங்குமா மம்மி...?

எழுதியவர் : ஹிஹிஹி (9-Dec-13, 10:58 pm)
பார்வை : 4636

சிறந்த நகைச்சுவைகள்

மேலே