பாரதியார் மீண்டும் வந்தால்

பாரதியார் மீண்டும் வந்தால்.....
=============================

செந்தமிழ் ஒலித்த நாட்டினிலே
காணவில்லைத் தமிழ்த் தேனடா
தேடிப் பார்த்தும்செவி பருகவில்லை
அமுதமொழி தொலைந்த தெங்கடா???

நாளும் பாலியல்தொல்லைகளில்
நாட்டில் பெண்கள் கதறலடா
இழிமானுட மிருகம் திரிதல் கண்டால்
அவன் தொடை இடுக்கை நீக்கடா!!!

இல வசத்தில்மக்களை சிக்க வைத்து
அரசியல் ஆட்டம் நடக்குதடா - மக்களை
சோம்ப லாக்கிக் குடிகெடுக்கும்
ஆட்டங்கள் அனைத்தும் ஒடுக்கிடடா!!!.!!.

கண்டாங்கி சேலை யழகுபெண்கள்
தெய்வக் கோலக்காட்சிஇன் றில்லையடா
ஜீன்ஸ்மிடி அரைகுறை ஆடையெல்லாம்
நல் லொழுக்கத்திற்கேவந்த மாகேடடா!!!

பச்சைவயல் பனை தென்னையென்று
அழகு கிராமம் தொலைந்தே போனதடா
அடுக்கடுக்காய் மாளிகை வளர்ப்பினிலே
அத்தனையும் பலி என்றானதடா!!!

பஞ்சம் வந்து வாட்டும் முன்னே
விவசாயத்தில் கவனத்தை திருப்பிடடா
விளை நிலங்களிலெல்லாம் பயிரிட்டே
உணவு உற்பத்திதனையே பெருக்கிடடா!!!!

நகை பொருள் உடமைகள் திருட்டென்று
அந்நாளினில் நடந்த கொடுமையடா
என்ன கொடுமை இன்று சொல்வேன்
மனித உறுப்புகளே திருடுபோகுதடா!!!

நாட்டிற்காக உயிர் கொடுத்த
நல்ல மனிதரினம் இன்றில்லையடா
சுயநலர் பணம் புகழ் தேடுதலில்
நல்மனித உயிர்கள் பலியாகுதடா!!!!

நிதிக்கெனவே நீதி விற்பனையில்
உண்மை, நேர்மை உயிர் போனதடா
குற்ற வாளி கூண்டில் நீதிபதி
கொடுங்குற்றம் எங்கே சாகுமடா???

அதிகாரம், உரிமை பெண்களுக்கு
வேண்டி நின்றதெல்லாம்வீ ணானதடா
அதிகாரம் அளித்த பேர்களையே
அவமதித்தே ஆட்டம் போடுதடா

எத்தனை உயிர்கள் மாண்டதிலே
பெற்ற சுதந்திரம் தொலைந்தே போனதடா
இலஞ்ச லாவண்ய சுதந்திரத்தில்
அரசியலதிகாரம் ஆட்டம் போடுதடா!!!

சுதந்திர பாரதம் காணும் ஆசையிலே
மண் இறங்கி வந்தேன் மனம் வேகுதடா
ஆயிரம் பாரதி இனி பிறந்தாலும்
சீர் திருத்துதலாகாது இது சாபமடா!!!

விழி காணா காட்சிகள் கண்டதிலே
மறு பிறப்பும் வெறுத்தே போகுதடா
வேண்டேன்.... வேண்டேன்... இனி பிறப்பு
நான் மீண்டும் மாண்டே போவேனடா!!!

எழுதியவர் : சொ. சாந்தி (11-Dec-13, 1:05 pm)
பார்வை : 1187

மேலே