நினைவுகள்

வெள்ளிச் சிதறல்களாய்
ஞாபகக் கடலில்
பொங்கிப் பிரவகிக்கும்
எண்ண அலைகள்
புள்ளிக் கோலங்களாய்
ஆங்காங்கே
மனத்திரையில்
பதிந்த நிகழ்வுகளுடன்
மோதி தெறித்து
கண்களின் வழியே
கரைந்து காணாமல் போகும்.
சிந்தனை கலைய
மனம் மறுக்கும்.
கவனப் படகு தடுமாறி
தத்தளிக்க
தூக்கத் துடுப்பு
கை கொடுக்கும்.
கண்கள் கதவுகளை மூட
மறுபடியும்
கனவுகளாய்
அணிவகுத்து மூளையின்
முடிச்சுக்களில்
நர்த்தனம்செய்யும்!

எழுதியவர் : சிவநாதன் (11-Dec-13, 8:18 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 129

மேலே