சிலோன் சகோதரி

எந்திர துப்பாக்கியின் சத்தங்களே
எங்கள் செவியில் ஒலிக்கும் செவக்கூவல்.
வெடித்துச்சிதறும் தீபிழம்புகள் தான் எங்களின்
அதிகாலை சூரியன்.
என் சகோதரியின் கற்பழிப்பு கதறல்கள்
எங்களின் இரவு நேர தாலாட்டாகிப்போனது
பிள்ளைகள் கண் அயர்ந்ததா என
பத்து முறை பார்த்த பின்பே
கணவனோடு கலவி கொண்டோம்
இன்று, ஈன்றெடுத்த பிள்ளை முன்பே
கற்பழிக்கப்பட்டு, கந்தல் துணியாய் கதறி துடிக்கிறோம்.
சேற்றில் செந்தாமரை முளைக்கும்
இந்த ரத்தசகதியில் எந்தலைமுறை முளைக்கும் போதே
கருகிபோனதென்ன ????

எழுதியவர் : Martin (31-Jan-11, 6:49 pm)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 381

மேலே