அகமும் சுகம் அடையும்

இதயமெனும் வானிலே
எண்ணமெனும் முகில்கள்
நாளும்கூடி கலைகிறது !
மாரியாய் பொழிகிறது
மடைதிறந்த வெள்ளமாகுது
மனம் மகிழும் வேளையிலே !
போராட்டம் சில நேரங்களில்
வெற்றியெனில் ஆனந்தமே
தோல்வியானால் துயரமே !
இரண்டும் ஒன்றே நமக்கு
முடிவல்ல அதுவே என்று
முடிவெடுத்தால் நலமே !
சுழன்றிடும் காலசக்கரம்
மாற்றிடும் சூழ்நிலையை
அகமும் சுகம் அடையும் !
பழனி குமார்