ஈழம் விடியும்
காந்தி தேசமும்
புத்த தேசமும் - என்
ஈழ தேசத்தை
வாழ விடாமல் - நிம்மதியாய்
வீழவும் விடாமல் - இன்று
மீளவும் விடாமல்
அகிம்சைக்கும்
அமைதிக்கும்
சமாதி கட்டி - அதில்
சாமர்த்தியமாய் அரசியல்
செய்து கொண்டிருக்கிறார்கள்
சாதிக்கப் போவதில்லை நீங்கள்
சாயத் தான் போகிறீர்கள் - அதுவரை
ஓயப் போவதில்லை
மாணவர் பேரவை ..