வேட்டை வெறியும் கோட்டைக் கனவும் ---அஹமது அலி---
மக்களை கொல்பவர்களை
தடுக்காதீர்கள்-அவர்களின்
உணர்ச்சிகளை வெளிப்படுத்த
அனுமதியுங்கள் என்று
காவல் துறைக்கு கட்டளையிடும்
காழ்ப்புணர்ச்சி தலைவனை
தலையில் வைத்துக் கொண்டாடுதே
மத சார்பற்ற நாடு!
0......0
இன அழிப்பு ஒன்றே
இலட்சிய வெறியாக
இரத்தத்தில் புரையோடிப் போன
இரக்கமற்றவர்களை இன்னும்
இரத்தினக் கம்பளம் விரித்து
இனிதே வரவேற்குதே
இறையான்மையுள்ள நாடு!
0....0
பெண்களின் கற்புகள்
அற்பங்களாக
குழந்தைகளின் பிஞ்சுயிர்கள்
சிறு புழுக்களை விடவும் கேவலமாக
அப்பாவிகளின் உயிர்
வேட்டை பிராணிகளாக
வேட்டையாட பட்ட போதும்
வேட்டைக்காரர்களின் கொடிபறக்கும்
கொள்கை மிக்க நாடு!
0....0
சர்வதேசங்களையும்
நடுங்க வைத்தவர்கள்
சர்வ சாதாரனமாக நடமாடி
சர்வரேக நிவாரணி போல் நடித்தும்
தேன் தடவிய விச உருண்டைகளை
சம(ய)யோசிதமாக
கடவாயில் திணிக்கும்
சமயசார்பற்ற நாடு!
0.....0
மான் வேட்டை குற்றம்
மயில் வேட்டை குற்றம்
மிருக வேட்டையெல்லாம் குற்றம்
மனித வேட்டையே
கோட்டை ஆளும் திட்டம்
வேட்டைக்காரர்களை
வேடிக்கை பார்க்கும் சட்டம்
சட்டமும் உயர் மட்டம் பார்க்கும்
சனநாயக நாடு!