தமிழ் - நாகூர் கவி

நாவினிலே நற்தமிழை
வாசித்தால் தேனாகிறது...
மூச்சுனிலே செந்தமிழை
சுவாசித்தால் சுவாசமாகிறது... !

காகிதத்தில் தமிழை
வடித்தால் கவிதையாகிறது...
கற்பனையில் தமிழை
படித்தால் கவிஞனாகிறது... !

ஏட்டினிலே தமிழை
படித்தால் பாட்டாகிறது...
இசையினிலே தமிழை
மொழிந்தால் இசையாகிறது... !

தாலாட்டிலே தமிழை
இசைத்தால் அன்னையாகிறது...
பேட்டியிலே தமிழை
சொன்னால் புகழாகிறது... !

மேடையிலே தமிழை
பேசினால் தலைவனாகிறது...
பாடையிலே தமிழை
போட்டால் உயிராகிறது... !

நெஞ்சினிலே தமிழை
விதைத்தால் வீரமாகிறது...
உள்ளத்திலே தமிழை
தைத்தால் வாழ்வாகிறது...!

எழுதியவர் : நாகூர் கவி (24-Dec-13, 9:38 pm)
பார்வை : 182

மேலே