பெயர்
பெண்களை எப்படி இருந்தாலும் இந்த உலகம் விட்டு வைப்பது இல்லை!
பேசினால் வாயாடி
பேசாவிட்டால் உம்மணா மூஞ்சி
அழுதால் நீலிக் கண்ணீர்
அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி
துணிச்சலாய் இருந்தால் திமிர்
துணிவில்லை என்றால் அப்பாவி
ஜடமாய் இருந்தால் அமைதி
கேள்வி கேட்டால் ஆணவம்
வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்
இல்லையெனில் சப்ப பிகர்.
ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு
காரமாய் பேசினால் முசுடு.
நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை.