ஆறிலிருந்து அறுபது வரை
காசுக்காக கொடி பிடிப்பவனும்,
காசு கொடுத்து
மடி பிடிப்பவனும்,
சொந்த வீட்டில்
இறந்ததாய்
சரித்திரம் இல்லை!
மன்னரின் ஆட்சியிலும்
மருமகள் ஆட்சியிலும்
சொந்த நாட்டுக்கும்
வந்த வீட்டுக்கும்
பிரிவினைகள்
காதல் தடையும்
கருத்தடையும்
சட்டத்தாலும்
தடைசெய்ய முடியாத
படைக்கலன்கள்!
முகம்பார்த்தவுடன்
வந்த காதலும்,
முகநூலில் வந்த காதலும்,
ஒரு நாள் சாட்சியின்றி
வாந்தி யெடுக்ளகும்