தோழன் தேவை
இதமான
இரவுகள் வேண்டும்
அதிலும் கொஞ்சம்
விடியல் வேண்டும்
நான் மட்டும்
தனிமையில் வேண்டும்
பேசிக்கொள்ள
ஒரு தோழன் வேண்டும்
கண்ணீர் பெருகும்
இன்பம் வேண்டும்
கட்டியழ
ஒரு தோழன் வேண்டும்
சொல்ல முடியாத
சோகம் வேண்டும்
சொல்லி முடிக்க
ஒரு தோழன் வேண்டும்
வெண் காகிதமாய்
இதயம் வேண்டும்
அதில் எழுதி வைக்க
உன் பெயர் வேண்டும்
உன்னதமான
உணர்வுகள் வேண்டும்
உதிரத்தில் கலக்க
ஒரு தோழன் வேண்டும்
விடியலை நோக்கிய
விழிகள் வேண்டும்
விழி மூடும் இமைகளாய்
ஒரு தோழன் வேண்டும்
காற்றிடம் கேட்டேன்
கலைந்து விடுவேன் என்றது
,நீரிடம் விண்ணப்பம் நீட்டினேன்
நிற்க மாட்டேன் என்றது
,
அனலிடம் ஆணையிட்டேன்
அள்ளிக்கொள்வாயா என்றது
விடை தேடும் விழிகள்
வலிக்கிறது எண்ணங்கள்
கணக்கிறது இதயம்
நண்பனே இல்லை என்ற பின்
நட்புக்கு எங்கே போவது?
யாரை கேட்பது
இனி யாரிடமும் கேட்பதற்கு இல்லை
எடுக்கிறேன் பேனா
எழுதுகிறேன் நான்
என் எண்ணங்கள் ,கனவுகளை
எடுத்துச்செல்லும் பேனாவே கேள்
நீ தான் என் தோழன்
அவற்றை ஏந்திக்கொள்ளும் காகிதமே
நீ தான் என் தோழன்
காகிதமே அனுப்புகிறேன்
என் கவிதைகளை ஏந்திக்கொள்
நீயும் கொஞ்சம்
உயிர் பெற்றுக்கொள்
.எங்கெங்கோ
தேடினேன் தோழனை
இறுதியில் கண்டேன் உங்களை
கிடைத்தது தோழமை எனக்கு
இனி கவலை ஏன் நமக்கு?????????????????