மறுசுழற்சி

நம் மனம்
ஓர் தண்ணீர்

சுமைகள்
பாரங்களாக
மாறிட
பனிகட்டியாகிறது

சுமைகளெல்லாம்
மறைந்து
கண்ணீராக
வெளியேற

ஆவியாகி
மறைந்து
போகிறது

மறுசுழற்சியானது
நீர் மட்டுமல்ல
நம் மனதின்
எண்ணங்களும்

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (2-Jan-14, 4:20 pm)
பார்வை : 970

மேலே