உயிர் நீ

உளியை இழந்த
சிற்பி போல ;
வாசம் பிரிந்த
மலரைப் போல ;
வானம் மறைத்த
நிலவைப் போல ;
புயல் வந்தடித்த
பயிரைப் போல ;
மனம் வாடிக்
கிடக்கின்றேன் ..........
தாயே ! உன்னைப் பிரிந்தத்
துயரத்திலே ......
மீண்டும் வருமா விடுமுறை
உன்னை நான் காண என்று
நாட்களைக் கழிக்கின்றேன் !