நேர் வகிடில் நெஞ்சம் கவர்ந்து
பிறைக்குத் தான்
கோபிப் பொட்டு வைத்தாய்
என்று நினைத்தேன் என்
கொள்ளை அழகே
எப்படி கார்முகிலுக்கும் வைத்தாய் ?
என்ன ? அது உன் நேர்வகிடா....?!
இல்லை அது உனக்குத் தெரியாது பெண்ணே....
அது உன் முகத்தில் நீந்தும் மீன்களை...
அரவமில்லாமல் பிடிக்கப் போகும்
அழகிய தூண்டில்......