நேர் வகிடில் நெஞ்சம் கவர்ந்து

பிறைக்குத் தான்
கோபிப் பொட்டு வைத்தாய்
என்று நினைத்தேன் என்
கொள்ளை அழகே
எப்படி கார்முகிலுக்கும் வைத்தாய் ?

என்ன ? அது உன் நேர்வகிடா....?!

இல்லை அது உனக்குத் தெரியாது பெண்ணே....

அது உன் முகத்தில் நீந்தும் மீன்களை...

அரவமில்லாமல் பிடிக்கப் போகும்

அழகிய தூண்டில்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Jan-14, 5:50 pm)
பார்வை : 88

மேலே