கடவுளின் கண்ணசைவில்

கருச்சுமந்த அம்மா
கணக்கிட்டுக் காத்திருந்தாள்
பலவிதமான பஞ்சாங்கம்
பார்த்திருந்தாள் பாட்டியுமே
தேர்ந்தெடுத்த மருத்துவரோ
தேதியுடன் நேரமும் குறித்தார்

எல்லோரையும் ஒரே வீச்சில்
முட்டிமோதி ,நெட்டித்தள்ளி
எட்டி விழுந்தான்
ஒரு குட்டிப்பையன்
தங்கக் கட்டிப்பையன்

கருவை உருவாக்கிய
கடவுளின் கண்ணசைவில்
சுதந்திரமாய் நடந்தது
சுகமான ஒரு ஜனனம்

எழுதியவர் : (15-Jan-14, 1:57 pm)
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே