இதயத்தைத் தேடினேன்

தேடினேன்
தொலைந்துவிட்ட இதயத்தைத்
தேடினேன்!

மேகத்தைத் தூதுவிட்டு
நிலவினில் தேடினேன்!

அலையினைத் தூதுவிட்டு
கடலினில் தேடினேன்!

தென்றலைத் தூதுவிட்டு
காற்றினில் தேடினேன்!

கிடைத்திடாக் கவலையால்
தரையினில் தேடினேன்!

அவள் வீட்டு
வாசல் முன் கிடந்தது!
வீசியெறிந்தக் குப்பையாய்

என் இதயம்........

எழுதியவர் : கணேஷ் கா (16-Jan-14, 8:04 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 80

மேலே