மழை

ஆனந்த சிறை
மழைக்கம்பி
எண்ணுகிறேன்.

*******

மழை ஒரு தீக்குச்சி
அது
காதல் கவிதைகளை
கொளுத்திப்போடுகிறது.

********

மழை சில ஆபாச கவிதைகளை
எழுதிவிடுகின்றது
உன்னை நனைத்து.

*********

மழை
மேலிருந்து கீழாய் அல்ல
பாக்கவாட்டில் பொழிகின்றது
உன்னை பார்க்கும் போது.

*********

அழகான வாசற்கோலத்தை
அழித்து நின்ற மழைக்கும்
நன்றி சொன்னது மனது
உன் பொன்மேனிமுழுதும்
முத்துக்கோத்ததற்காக !

*********

வேர்வரை நனைக்காத
மழை என்ன மழை ?
உயிர் தொட்டு கசியாத
காதல் என்ன காதல் ?

*********

மழை!
காதல்.
நீ !
ஜலதோஷம்!

எழுதியவர் : அப்துல் வதூத் (25-Jan-14, 2:05 am)
சேர்த்தது : அப்துல் வதூத்
Tanglish : mazhai
பார்வை : 98

மேலே