முதிர் கன்னியின் மணமாலை மகிழ்ச்சி
தைபிறக்க மணமாலை பூக்க
==அகம் குளிர்ந்தேன் மகிழ்ச்சியால் !
கைகொண்டு மெல்ல மெல்ல
==முகம் மறைத்தேன் நாணத்தால் !
மையெழுதும் விழி மலர
==நகை பூத்தேன் இன்பத்தால் !
பைந்தமிழில் கவி புனைந்து
==தினம் ரசித்தேன் பரவசத்தால் !
சையோகை என ஆனதிலே
==உளம் களித்தேன் குதுகலத்தால் !
வைபோகமாய் வாழ் வமைய
==நன்றி சொன்னேன் விழிபெருக்கால் ...!!!
(சையோகை = மனைவி )