முதிர் கன்னியின் மணமாலை மகிழ்ச்சி

தைபிறக்க மணமாலை பூக்க
==அகம் குளிர்ந்தேன் மகிழ்ச்சியால் !

கைகொண்டு மெல்ல மெல்ல
==முகம் மறைத்தேன் நாணத்தால் !

மையெழுதும் விழி மலர
==நகை பூத்தேன் இன்பத்தால் !

பைந்தமிழில் கவி புனைந்து
==தினம் ரசித்தேன் பரவசத்தால் !

சையோகை என ஆனதிலே
==உளம் களித்தேன் குதுகலத்தால் !

வைபோகமாய் வாழ் வமைய
==நன்றி சொன்னேன் விழிபெருக்கால் ...!!!

(சையோகை = மனைவி )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Jan-14, 10:25 pm)
பார்வை : 194

மேலே