என்னை ஏதோ செய்துவிட்டாள்

அடி பெண்ணே !

என்னை ஏதோ
செய்துவிட்டாய் !
என்னை எதையோ
செய்துவிட்டாய் !

புதுமையாய் உணர்கிறேன்
புதுசாய் சிரிக்கின்றேன்.
பற்பசையை முகத்தில்பூசி
பற்களை தேய்க்கிறேன்.
பிறபாஷைகளில் எழுதி
தமிழ்கவிதை என்கிறேன்.


உயிரெழுத்து எதுவென்றால்
உன் பெயரை சொல்கிறேன்.
மெய்யெழுத்தை கேட்டால்
உன் தேகத்தில் தேடுகிறேன்.


அறியவில்லையடி யாப்பு
நீயேயென் சிந்தனை தோப்பு
கவிதையென்று எழுதுகிறேனடி.
உன் உறவுக்காகவே
விதியை மீறுகிறேனடி.

காதலுக்கு எதற்கு
மொழி இலக்கணம்? - உன்
விழி இலக்கணம்
கற்கவேண்டும் எனக்கு.

அடியே..!
அடி அடியாய்
உன்னை எழுதுகிறேன்
என்னை ரசிக்கிறேன்.
நீ கவிதையடி
நான் ரசிகனடி.

விசித்திரமாய் சிந்திக்கும்
உன் விசிறி நான்.
நீ இரட்டை இலை
நான் உதயசூரியன்
கூட்டணி வைக்கலாமா?
கூடல் கொள்ளலாமா?

என்னை ஏதோ
செய்துவிட்டாய் !
என்னை எதையோ
செய்துவிட்டாய் !

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (30-Jan-14, 6:34 pm)
பார்வை : 712

சிறந்த கவிதைகள்

மேலே