சௌபாக்கியனாள்

கொத்தி கிளறி இரைதேடும்
கோழிபோல் சலிப்பின்றி
சமாதானதூதின் சலங்கையொலி

சல்லடையில் சலித்து
சாஷ்டாங்கமாய் எனதென்று
சரணாகதியடையும் சௌபாக்கியனாள்

வியர்த்து கொட்டும் துளிகளை
காற்று களவாடி செல்வதைப்போல
பனித்துளிகளை ஆதவன் பக்குவமாய்
பருகுவதிலும் பரவசமே

நீர்குமிழிலும் வானவில்லின் வண்ணசுவடு
திவலைகள் நீர்த்துபோய்விடினும்
மனதிலும் எண்ணசுவடு...

தனித்தொன்றாய் நடைபயில
தொடர்னடையில் துணையாகி
நிழலாகிபோன அதிசயமே

பிரித்தறிந்த சொல்லுக்கெல்லாம்
பிறிதொரு பொருள்கொண்டு
இணைவாக்கியமமைக்க
நிஜத்திலிது நிச்சயித்தனாள்

எழுதியவர் : bhanukl (2-Feb-14, 4:35 pm)
பார்வை : 106

மேலே