என் கவலை

மனதில் உள்ள கவலை சொல்லவேண்டும்,
யாரிடம் சொல்வது....

குணம் கொண்டோர் தேட,
இனம் காணமுடியவில்லை.

உறவு என்போர் இருக்க,
உண்மை இருக்கவில்லை .

நண்பர் உண்டு நாடலாம்,
நம்ப வில்லை என்னையும்.

மனைவியிடம் பேசலாம் ,
மறுக்குது மனசுமே.

பிள்ளைகளிடம் கேட்கலாம் ,
பின் விளைவை நினைக்குதே.

கோவில் சென்று சாமியிடம் உருகலாம் ,
கூட்டம் நிக்க விடாமல் தள்ளுதே.

தாடிச் சாமியாரிடம் தயக்கம் என்ன,
என்றே சென்றேன்
அவர் தயங்கி தயங்கி புலம்புகிறார்
அவர் குறையை .

எழுதியவர் : arsm1952 (3-Feb-14, 7:50 pm)
Tanglish : en kavalai
பார்வை : 499

மேலே