வீடு

செங்கமலப் பூக்கள் பூக்கும்
பூந்தோட்டமில்லை...
சேர்ந்தங்கு விளையாட-ஒரு
மைதானமும் இல்லை...
அடுக்குமேலே அடுக்கி ஒரு
அறைகளுமில்லை...
ஆளுக்கொரு அறைகளெனப்
பிரிக்கவ மில்லை...
ஆளுயரக் கதவுகளுமங்கே
அமைக்கவுமில்லை....
அழகான வனப்புடனே
படைக்கவுமில்லை..
முகம்பார்க்கும் தரையையும்
தடவியதில்லை....
முடிமுதல் அடி வரை
உயரமுமில்லை....
முற்றத்தில் ஆடிடவே
ஊஞ்சலும் இல்லை. ..
முன்னேயும் பின்னேயும்
படித்ததும் இல்லை. ...
அலமாரியதில் துணிகளையும்
அடுக்கியதும் இல்லை. ...
அழகழகாய் எப்போதும்
உடுத்தியதும் இல்லை. ...
இத்தனையும் எப்போது
கிடைக்குமென்றே...-என்
தெருவோரக் குடிசையிலே
கனவு கண்டேன். ...!!!

எழுதியவர் : (malligai) (5-Feb-14, 6:43 pm)
பார்வை : 104

மேலே