Malligai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Malligai
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  14

என் படைப்புகள்
Malligai செய்திகள்
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-May-2014 9:36 pm

நண்பனே ...
நடந்துவந்த பாதையை
மறந்துவிடுபவர்களுக்கு
மத்தியில் ...

நான்
கடந்துவந்த பாதையின்
கால்தடங்கள்
'காயமுறுதலை'கூட
காணச்சகியாதவன் நீ ..

என் உயிரினை தாங்கி
மனிதவுருவில் உள்ள
என் இன்னொரு
மனசாட்சி நீ ..

'நண்பன்' என்ற சொல்லின்
அர்த்தங்களை
அகராதிகளில்
தேடிக்கொண்டிருக்கையில்
'அதன் அர்த்தமாய்' என் முன்னே
வந்தவன் நீ ..

தோல்விகள் கூட என்
தோழனிடத்தில்
படு தோல்வி
அடைந்துவிடும்மெனகூறி
துவண்டிருந்த என்னையும்
துடித்தெழச்செய்தவன் நீ ..

உயிரினை
காதலர்களும் தருகிறார்கள்
பரிமாறிக்கொள்வதன் மூலம்
ஆனால்
அது
பண்டமாற்று அல்லவா ?

நீ
உயிரினையும்
தருக

மேலும்

நன்றி நண்பரே 03-Jun-2014 9:49 am
உன்போல் உயிர்த்துணை ஒருவன் இருந்துவிட்டால் நட்புக்கு தலை வணக்கம் 03-Jun-2014 9:26 am
ஆம் நண்பரே உண்மை அதுதான். காதல் கூட ஒருவகையில் எதிர்பார்ப்பு உடையதுதான்.//கருத்துக்கு நன்றி நண்பரே 20-May-2014 9:08 pm
வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி நண்பரே 20-May-2014 9:06 pm
Malligai - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 12:52 pm

தொப்புள் கொடியிலே
இணைந்து-பிரிந்து
தொட்டிலிலே மழலை
நவிழ்ந்து-மகிழ்ந்து
தத்தித்தத்தி தவழ்கையிலே
தானும் தவழ்ந்து
ததிகிடுதோம் ஆடுகையில்
தாளமாய் கலந்து
கற்றிடவே அளவில்லை
என்றுணர்த்தி
காலத்தின் பயன்தன்னை
தனக்குணர்த்தி
பூவே....
உன் சிரிப்பையே
தன்பலப்படுத்தி
உன் வளர்ச்சியையே
சிகர எல்லையாக்கி
முகடுகளில் முட்டாவண்ணம்
முன்நின்று காப்பாளே....
முரண்பாட்டிலும்
உனதெண்ணத்திற்கு
முட்டுக்கட்டை இட்டதில்லை...
உன் முயற்சிக்கு
முழுமூச்சாய் கட்டும் வலையே
உனது தாயன்புதானடி
என் தங்கமே.....

அன்னையர் தினவாழ்த்துக்கள்.....

மேலும்

சூப்பர் 12-May-2014 8:51 am
முகடுகளில் முட்டாவண்ணம் .....ஒரு நல்ல வரி. 11-May-2014 2:35 pm
Malligai - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2014 3:15 pm

என்னை யாரென
எனக்கு அறிமுகப்படுத்திய
யாரோ ஒருவனிற்காக
என் இனிய எழுதுகோல்
எழுதுவது ..

என் மீது
நான் கொண்ட பேரன்பிற்கு
நிகர் ஏதுமில்லை
என்றேன் !
பொய்யாக்கினாய் நீயடா ...
என்னை நேசித்து !!

வார்த்தைகளுக்குக் கூட
வலிக்காதவண்ணம் பேசும்
மெல்லிய மேனியாளையும்
நடு நடுங்க
வைத்தாய் நீ ,
பார்வையாலேயே !!

எழுத்துகளை நேசிக்கும்
எழுதுகோலாகிய இவள்
ரசிப்பதெல்லாம் உன்
கையெழுத்தைத்தான்..
உன் மாயையாலே !!

இதற்கும் மேலே,
வாழ்க்கை புரியவில்லை
என்றேன் ,நான் ..
காதலிக்கக்
கற்றுத்தந்தாயடா நீ !!!

மேலும்

நன்றி நண்பரே !! 06-May-2014 2:43 pm
கண்டிப்பாக ஐயா!!மிக்க நன்றி ஐயா .. 06-May-2014 2:43 pm
உள்ளம் பேசுதடா ! 05-May-2014 10:11 am
இனிமை ....நன்று 03-May-2014 5:40 pm
Malligai - ர த க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2014 12:57 pm

சின்ன பெண்ணே ...!!
உன் சினுங்களில்..
சிறகுடைந்து
போகிறேன்...
உன் சிரிப்பினில்
எனை மறந்து போகிறேன்...
உன் அழகினில்
எனை இழந்து போகிறேன்
உன் அன்பில் மட்டுமே
எனை உணர்ந்து வாழ்கிறேன் ..........!!!!

உன் அன்பில் மட்டுமே....
நான் வாழ்கிறேன்....




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$
$$
கமெண்ட்ஸ் ப்ளீஸ்.....!!!!!!!!!!!!!
$$
$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மேலும்

அருமை நட்பே 15-Jul-2014 2:20 pm
Thank you....:) And for ur correction also..:) 03-Jun-2014 2:38 pm
நன்று நண்பரே 03-Jun-2014 1:37 pm
Thank YOu So MUch............:) 02-Jun-2014 5:56 pm
Malligai - கவிபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 6:47 pm

உன் வார்த்தை என் மனதை
கொன்றபோதும்..
வெறுக்கலியே உன்னை நான்..!!
நொந்தமனம் ஆறாது
என்றறிந்தும்..
மாறலியே இன்றும் நான்..!!
உன் கண்ணீர் பார்த்ததுமே
தாயாட்டும்..
பொறுக்கலியே என் மனது..!!
நீ கொடுத்த வலிமறந்தும்
உனக்காக....
வேண்டுறேனே இராப்பகலாய்..!!
நான் அழுதும் வாழுறேனே
உன் சந்தோஷம்
பார்த்து தினம்..!!
நீ அழுதா தாங்கலியே
என் உள்மனது...
உன் வலிஉணர்ந்தே
சாகுது இங்கு என் உசிரு..!!!

...கவிபாரதி...

மேலும்

ஆணின் காதல் உண்மையான என்றும் என்றென்றும் ......!!!! 12-Apr-2014 5:57 pm
உண்மை அன்பு இதுதான்.. நன்று தோழா 11-Apr-2014 8:48 pm
Malligai - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 11:28 pm

மின்னலாய்
இடியாய்
மழையாய்
பொழிவது....
காதல்....!!!!!

மேலும்

Malligai - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 8:00 pm

புரட்டினால் புரியும் புதுவரி
திரட்டினால் உனக்கு தித்திப்பு
மனத்தில் தோன்றா மகத்துவமும்
மனக்கண் முன்னே நிற்குமே...
அமுதசுரபி போலவே
முடிவுமிதற்கு இல்லையே...
எல்லையில்லா சொற்களும்
ஏராளமாய் அறியலாம். ..
படித்து நீயும் பழகினால்
பண்புகளும் வளருமே....
முகவரியும் இல்லையே
முற்றுப்புள்ளி வைத்திடாய்...
முயன்று நீயும் கற்பதால்
முன்னேறுவாய் வாழ்வினில்..!

மேலும்

Malligai - Malligai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 6:56 pm

வளர்த்தால் பசுமை
வானுயர்ந்தால் வரும் மழை
உண்ண உணவு
ஊனத்திற்கும் மருந்து
உயிர் வாழ பிராணவாயு
உலகே உன்னால் ஒளிமயம்
நீ செழிக்க. ,நாடு செழிக்கும்
கூட்டத்தோடு குருவிகள் -அங்கே
கூடி வாழ கற்றன.....
கூடி வாழ கோடிநன்மை
கூறியது உனைக்கண்டோ...?
ஆடிப்பாடி விலங்குகள்
அயர்ந்ததுன் நிழலிலே..
காய்கனிகள் இலைகளும்
கணக்கின்றி பயன்தரும். ..
காணக்கிடைக்கா பூக்களும்
கண்கள் கவர ஒளிருமே...
இத்தனையும் கொடுக்கிறாய்
கோடைக் கொடுமை போக்கிடும்
கொடைவள்ளலும் நீதானோ.....!!!!!

மேலும்

மிக்க நன்றி. .. 06-Feb-2014 8:33 pm
நன்றி தோழரே... 06-Feb-2014 8:30 pm
மரம் கோடைக்கு கொடைக்கானல் கொடுப்பதிலே சீதாக்காதி ! பிச்சைப் பாத்திரம் நாமோ அட்சயபாத்திரமாம் மரத்தை அழித்துவிடுகிறோமே !!! கல்லடித்தும் கனிதரும் மரத்தை களவு செய்தால் வளம் ஏது ????? நன்று 06-Feb-2014 8:27 pm
அருமை தோழி 06-Feb-2014 7:32 pm
Malligai - myimamdeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2014 8:01 pm

புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !

விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?

விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது

கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?

களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 18-Feb-2014 6:14 pm
அருமை பதிவு 18-Feb-2014 5:56 pm
உங்கள் வருகைக்கும் தங்களின் ஆழ்மையான கருத்திற்கும் மிக்க நன்றிகள் . 16-Feb-2014 9:09 am
உண்மைதான் முகமூடி பலரின் செயல்களுக்கு மூடியாக இருப்பது வருத்தமே ... முற்றினா கடைக்கு வரும் வந்துகொண்டே இருக்கிறது 16-Feb-2014 9:01 am
Malligai - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 6:56 pm

வளர்த்தால் பசுமை
வானுயர்ந்தால் வரும் மழை
உண்ண உணவு
ஊனத்திற்கும் மருந்து
உயிர் வாழ பிராணவாயு
உலகே உன்னால் ஒளிமயம்
நீ செழிக்க. ,நாடு செழிக்கும்
கூட்டத்தோடு குருவிகள் -அங்கே
கூடி வாழ கற்றன.....
கூடி வாழ கோடிநன்மை
கூறியது உனைக்கண்டோ...?
ஆடிப்பாடி விலங்குகள்
அயர்ந்ததுன் நிழலிலே..
காய்கனிகள் இலைகளும்
கணக்கின்றி பயன்தரும். ..
காணக்கிடைக்கா பூக்களும்
கண்கள் கவர ஒளிருமே...
இத்தனையும் கொடுக்கிறாய்
கோடைக் கொடுமை போக்கிடும்
கொடைவள்ளலும் நீதானோ.....!!!!!

மேலும்

மிக்க நன்றி. .. 06-Feb-2014 8:33 pm
நன்றி தோழரே... 06-Feb-2014 8:30 pm
மரம் கோடைக்கு கொடைக்கானல் கொடுப்பதிலே சீதாக்காதி ! பிச்சைப் பாத்திரம் நாமோ அட்சயபாத்திரமாம் மரத்தை அழித்துவிடுகிறோமே !!! கல்லடித்தும் கனிதரும் மரத்தை களவு செய்தால் வளம் ஏது ????? நன்று 06-Feb-2014 8:27 pm
அருமை தோழி 06-Feb-2014 7:32 pm
Malligai - Malligai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 6:43 pm

செங்கமலப் பூக்கள் பூக்கும்
பூந்தோட்டமில்லை...
சேர்ந்தங்கு விளையாட-ஒரு
மைதானமும் இல்லை...
அடுக்குமேலே அடுக்கி ஒரு
அறைகளுமில்லை...
ஆளுக்கொரு அறைகளெனப்
பிரிக்கவ மில்லை...
ஆளுயரக் கதவுகளுமங்கே
அமைக்கவுமில்லை....
அழகான வனப்புடனே
படைக்கவுமில்லை..
முகம்பார்க்கும் தரையையும்
தடவியதில்லை....
முடிமுதல் அடி வரை
உயரமுமில்லை....
முற்றத்தில் ஆடிடவே
ஊஞ்சலும் இல்லை. ..
முன்னேயும் பின்னேயும்
படித்ததும் இல்லை. ...
அலமாரியதில் துணிகளையும்
அடுக்கியதும் இல்லை. ...
அழகழகாய் எப்போதும்
உடுத்தியதும் இல்லை. ...
இத்தனையும் எப்போது
கிடைக்குமென்றே...-என்
தெருவோரக் குடிசையிலே
கனவு கண்டேன். ...!!!

மேலும்

நன்றி நண்பரே. ..! 06-Feb-2014 6:07 pm
நன்றி நண்பரே. .. 06-Feb-2014 6:06 pm
அழகான படைப்பு 06-Feb-2014 2:16 pm
உங்கள் பெயரைப்போலவே கவிதையும் மணம்வீசுகிறது 06-Feb-2014 8:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கவிப்ரவீன்குமார்

கவிப்ரவீன்குமார்

திருவண்ணாமலை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
kavingharvedha

kavingharvedha

madurai
user photo

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே