காத்திருக்கிறாள் காதல் நாயகி
தாமரை முகத்தினள் காதலி
கயல்கள் நீந்தும் விழியினள்
நித்திலம் கோர்த்த பூவிதழினள்
சிற்றிடை சோர்ந்த மெல்லியள்
மாலையில் சோலையில் அமர்ந்தாள்
அந்தியும் மெல்ல சாய்கிறது
ஆதவனும் மெல்ல மறைகிறான்
காதலன் இன்னும் வரவில்லை
காத்திருக்கிறாள் காதல் நாயகி !
~~~கல்பனா பாரதி~~~