காதலோடு ஒரு வாழ்த்து - எட்டு

தண்டவாளங்களில் நீ ஒரு பக்கம் நான் ஒருபக்கம்
என

சிறு பிரயாத்தில் கை கோர்த்தபடிதானே நடந்து சென்றோம்.......

ஒருவரை ஒருவர் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள
ஒயிலாக சமநிலையில் நடந்து சென்றோமே......

எப்படி மாறியது அந்த நட்பு
எழிலான காதலாய் நமக்குள்ளே.....

பூக்கள் பூத்ததால் காதல் வந்ததா
காதல் வந்ததால் பூக்கள் வந்ததா

என்று நம் இருவருக்குமே புரியவில்லை......

ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.....

புரிந்து கொண்ட உணர்வுகள் முழுதாய் தங்களை
புரிந்து கொண்ட பிறகே....
பூரித்த பூக்களுக்குள் புகுந்திருக்கும் வாசம்
புரியத் தொடங்குகிறது மெல்ல மெல்ல.....

காதலே நீ வாழ்க வாழ்க...

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Feb-14, 8:53 am)
பார்வை : 96

மேலே