சிந்துமெழில் புன்னகையே
சிந்துமெழில் புன்னகையே
சிவந்த அந்திப் பொழுதினிலே
சிந்தா முத்துகளை கோர்த்தெடுத்து
சிந்தும் தமிழ்க் கவிதை தந்தேன்
இந்துவும் நாணி முகில் திரையில் ஒளிய
இந்த பூமியில் எனக்காக வந்தவளே
இந்துவிற்கும் இளையவளே என் இனியவளே
அந்த வானத்து சொர்கத்தை நானறியேன்
உந்தன் விழியினில் அதை காணுகின்றேன் !
~~~கல்பனா பாரதி~~~