இதயத்தை திறந்து வானத்துக்கு வழி விடுங்கள்

ஜெயிக்கப் போவது யாரு - நீ
செயல்பட்டால் ஜோரு.....!

முடியும் என்று கூறு - நீ
முயற்சித்துப் பாரு.....!

தோல்வி என்ற மலர்கள் பறித்து
தொடுத்து விடு வெற்றி மாலை

வலிகள் என்ற வாசம் நுகர்ந்து
வாழ்ந்து விடு வாழ்க்கை சோலை....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Feb-14, 11:52 pm)
பார்வை : 76

மேலே