இதயத்தை திறந்து வானத்துக்கு வழி விடுங்கள்
ஜெயிக்கப் போவது யாரு - நீ
செயல்பட்டால் ஜோரு.....!
முடியும் என்று கூறு - நீ
முயற்சித்துப் பாரு.....!
தோல்வி என்ற மலர்கள் பறித்து
தொடுத்து விடு வெற்றி மாலை
வலிகள் என்ற வாசம் நுகர்ந்து
வாழ்ந்து விடு வாழ்க்கை சோலை....!!