எங்கிருக்கிறாய்

நீ எனக்குள்
எங்கிருக்கிறாய்?
நான் எனக்குள்
கேட்டேன் .....
பார்க்கும் விழிகளும்
எழுதும் விரல்களும்
சொன்னது ....
நீ அங்கிருக்கிறாய்
என்று !
துடிக்கும் இதயமும்
சிரிக்கும் இதழ்களும்
சொன்னது ...
நீ அங்கிருக்கிறாய்
என்று !
நான் உன்னிடம்
கேட்கிறேன்
விநாடி கூட
விலகாத நீ
எனக்குள்
எங்கிருக்கிறாய் ?