போதுமா போதை

(நம்மாளு நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விரிந்து படைச்சுட்டாரு...)

காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி...உள்ளே சென்று மனைவியிடம்..

கணவன் : (தயங்கிக்கொண்டே...) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?

மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?

கணவன் : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)

மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....

(கேட்டவுடன் கணவனுக்கு மயக்கம்....)

எழுதியவர் : உமர்ஷெரிப் (27-Feb-14, 2:10 pm)
Tanglish : POTHUMA pothai
பார்வை : 193

மேலே