தேர்வு பயம்

தேர்வு சுரம் பிள்ளைக்கு
தேர்வு பயம் அன்னைக்கு
தினமும் முதுகில்
பொதி சுமக்கும் குழந்தை
பொது தேர்வெழுத
மனதில் பாரம் சுமக்கிறது
பெற்றோர் கெளரவத்திற்கு
பேர் சேர்க்க முயற்சித்து ்
தினமும் மூளையை கசக்கி
மனப்பாட எந்திரமாய்
மதிப்பெண் களஞ்சியமாய்
உறக்கதிற்கு ஏங்கி
கண்கள் வீங்கி
வயிற்றுப் பசி மறந்து
பள்ளிப் பருவ சேட்டைகள் துறந்து
பாவப்பட்ட ஜீவனாய்
தேர்வு முடிவு வரும்வரை
தினம் தினம் அஞ்சி நடுங்கும்
அசாத்திய சூழல் இது....

எழுதியவர் : சித்ரா ராஜ் (27-Feb-14, 7:54 pm)
Tanglish : thervu bayam
பார்வை : 260

மேலே