பேரழகு - கே-எஸ்-கலை

மெல்லிய காற்றில்
முத்தப் பரிமாற்றங்கள்
மரங்களுக்கிடையில் !
==
பட்டமரத்தின் நிழல்
தாரளாமாய் எப்போதும்
எறும்பு கூட்டத்திற்கு!
==
நீர்க் கொடிகள்
தழுவிக் கொண்டிருக்கும்
பழைய கல்லறைகள் !
==
மலர்வளையம்
துக்கமின்றி தேனெடுக்கும்
தேன் பூச்சிகள் !
================
பொய்யழகு
கவிதைக்கு "பொய்" அழகு
உண்மை பேரழகு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (2-Mar-14, 11:24 am)
பார்வை : 417

மேலே