ஈகை

தேடித் தேடிப் பெற்றதால்
என்னவோ
செல்வந்தன், செல்வம்
தண்ணீரென ஓரிடமும்
நிற்காமல் ஓடுகிறது...
உண்ணாமல், உடுத்தாமல்
பதுக்கி வைத்தும்
உறங்காமல் விழித்துக்
காத்து நின்றும்...
காண்ணாக காக்கின்றாய்
நீயும் காசினை
அது காக்காமல் கூட போகும்
ஓர் நாள் உன்னை...
நீ மண்ணாக போகும்
எதிர் நாளில்
உன்னை பாதிக்காது போகும்
இந்த உலகம்...
வாடி நிற்கும் வறியவர் தேவையறிந்து
நாடி வந்து ஈவதே நல்லவர்
செய்கை ஆகும்..
நல்லெண்ணம் கொண்டு
நீயும்
இனிதே என்றைக்கும்
ஈகை செய்...