கொழுந்துகளைக் கருக்கி

கொழுந்துகளைக் கருக்கி
தின்னத் துவங்கிவிட்டது
பனிக்காலம்.

தேயிலைக் காடுகளின் எந்தத்
தொங்கலிலும்
தொழிலாளர்கள் இல்லை.

ஓந்திகளில் தெரியும்
தேயிலை மூடுகளில் இடுப்புத் தாட்டுகள்
தூங்குகின்றன.

மான்களையோ
முயல்களையோ தேடி
அலையக்கூடும் அவர்கள்.

வழக்கம்போல தொழிற்சாலையிலிருந்து
மின்சாரக் கொம்பு ஓங்கி
மலைகளை அறைகிறது.

எழுதியவர் : -- (7-Mar-14, 6:18 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 511

மேலே