அடேய் குடிகாரனே

வியர்வைச் சிந்தி

உழைத்து வருவான் சிலநூறு

அலுப்பு போக

குடிக்கப் போவான் ஒரு"நூறு"!


போதை கொஞ்சம்

ஏறும் போது புத்திமாறும் !

நேர் பாதையிலே

நடக்கும் போதே தடுமாறும் !


தினம் குடிக்க

அவன் குடும்பம் தள்ளாடும் !

சண்டை கூச்சல்

தினம் நடக்கும் வீட்டோடும் !


பெருகிப் போகும்

குடித்த கடன் தொல்லைகள்

கருகிப் போகும்

கல்விப் பயிலும் பிள்ளைகள் !


பெற்ற பிள்ளை

நற்பெயரும் கெட்டுப் போகும்

கட்டியவள்

கற்பும் கூட களங்கமாகும் !


உழைத்த காசு

மதுவாலே அழிந்துப் போகும்

உழைத்த உடல்

நோயாலே வீழ்ந்துச் சாகும் !


போதையாலே

பாடை ஏறும் வாழ்கை ஏனடா ?

புரிந்துக் கொண்டால்

சிறக்கும் உந்தன் வாழ்வு தானடா !

எழுதியவர் : தமிழச்சி (10-Mar-14, 5:56 pm)
பார்வை : 286

மேலே