இறை புலம்பல்

பொருளற்ற பொருள் தேடி
பொழுதும் போக்குகிறேன்
மனமும் நிகழ்வும் ஒத்திசையாத
வாழ்க்கை...

இதை வீணென்று வேரருப்பதா
இல்லை வாழ்வென்பதிதுதான்
என விளங்கிக்கொள்வதா?

இருப்புக்கும் விருப்புக்குமிடையில் அல்லாடுமெனை
ஆட்கொண்டருள்வாய் இறைவனே...

எழுதியவர் : ரஸ்ஸல் (11-Mar-14, 6:58 am)
பார்வை : 107

மேலே