கட்டுப்பாடு
கட்டுப்பாடு
----------------
இயற்கை நம்மை வாழவைக்கும்
இயற்கையின் சீற்றம் நாமறிவோம்
இயற்கைக்கு இறைவன் கட்டுப்பாடு
இராகம் இல்லாமல் இசை இல்லை
இசைக்கு தாளம் கட்டுப்பாடு
எழுத்தில்லாமல் மொழி இல்லை
இலக்கணம் மொழிக்குக் கட்டுப்பாடு
நதிக்கு கடல் கட்டுப்பாடு
கடலுக்கு கரைதான் கட்டுப்பாடு
மலருக்கு வாசம் உயர்வளிக்கும்
மலருக்கு மகரந்தம் கட்டுப்பாடு
உடலுக்கு உயிர்தான் அழகு தரும்
அந்த உயிரிக்கு இறைவன் கட்டுப்பாடு
கற்பனையில் எழுவது கலையும் கவிதையும்
மெய்ஞானம் இதன் கட்டுப்பாடு
மனைவி கணவன் மக்கள் குடும்பம்
நல்லொழுக்கம் குடும்பக்கட்டுப்பாடு
கட்டுப்பாடு இல்லை எனில்
உலகம் என்றோ மாய்ந்து போயிருக்கும்
கட்டுப்பாடு இறைவன் வகுத்த வழி
------------------
i