இரவுக் காடு
இரவானதும்
கவ்விக் கொண்டு
திரியும்
பூனையின் வாயில்
இனம் புரியாத
தேகம் நடுங்குகிறது.....
---------------------------------------
நீண்ட இரவுகளில்
நிலவைத் தேடி
தவிக்கிறாள் ...
ஜன்னல் திறந்த
வீட்டுக்காரி....
------------------------------------------
ஒவ்வொரு
இரவும்
வெவ்வேறு
இரவே .....
------------------------------------------
இரவின் தூண்டிலில்
சிறு வெளிச்சமும்
மீன்களே.....
-----------------------------------------
நதியில்
துடுப்பு போடுவது
போல...
இரவில்
உன் கண் சிமிட்டல்....
-------------------------------------------