மூன்றாவதும் பெண் தான்

பிஞ்சுக்களின்
அழுகுரல்கள்..
பசிக்கான ஓசை !

தாய்மையின்
அரவணைப்பு...
பெருமிதத்தின்
வெளிப்பாடாக !

உச்சமாய்...
கண்களில் உருண்டோடிய
கண்ணீர் !
பார்வையாளரற்ற
அவள் அறை...
“....மூன்றாவதும் பெண்தான்….”
சாபங்கள் எல்லாத்திசைகளிலும்.......!

எழுதியவர் : வீ.ஆர்.கே (18-Feb-11, 8:52 pm)
பார்வை : 420

மேலே