பெரியவள்

ஆளாகிவிட்டேனாம்
உறவினர்களின் ஆரவாரம்
தோழிகள் சகிதம்
பள்ளியில் அரட்டை
முடிந்தே போனது
நேற்றோடு.....
தென்னங்கீற்றுகள்
முதல் சிறையாய்..
சூட்டின பூச்சரம்
கை விலங்காய்...
என்றும் மாறாதது
முற்றத்தில்
கூட்டமைத்து வசிக்கும்
சிட்டுக்குருவியின் உடனான
என் நட்பு......!

வில்லியனூர் ராஜ கருணாகரன்

எழுதியவர் : வீ.ஆர்,கே (18-Feb-11, 9:04 pm)
பார்வை : 350

மேலே