காத்திருந்தேன்......................
அன்பே!
என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என் நானோ வீதியிலே
காத்திருக்கிறேன்,
ஒரு நாள் ஓர் நற்செய்தி-என்னவென்றால்
உன் நண்பர்கள் நீ வருகிறாய் என்று என்னிடம் சொன்னதும் நான்
மகிழ்ச்சியில் கை குலுங்க வளையல்கள்,
பூவும்,பொட்டு அணிந்துகொண்டு மகிழ்ச்சியோடு
காத்திருந்தேன்-நீ வருவாய் என -ஆனால் யாரும்
என்னிடம் சொல்லவில்லை அவன்
சடலம் வருகிறது என்று..................................
என்றும் நினைத்து கொண்டே வாழும்
உன்னவள்.........................