ஓர் மீனின் தாலாட்டு

கண்ணே கண்ணுறங்கு !
சிறு மீனே கண்ணுறங்கு !
கடல் தண்ணீர் குறையாமல்
கடும் வெப்பம் படராமல்

அலை வந்துனை எழுப்பாமல்
அகண்ட திமிங்கிலம்
உன்னை உரசாமல்
கண்ணுக்குள் வைத்து தாலாட்டுவேனடி !!

நீ தத்திதவழ ரசிப்பேனடி
தரைக்கு செல்ல மறுப்பேனடி
மறந்து சென்றால்
- நான் இறப்பேனடி

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (20-Mar-14, 1:44 pm)
பார்வை : 159

மேலே