நீ தந்த காதல் வலியின் ரணம் 555

உயிரே...

சுட்டெரிக்கும் கதிரவனை
நான் அதிகம் நேசித்தேன்...

பௌர்ணமி நிலவாக
குளிர்ச்சி தந்தாய்...

நீரோடையின் சப்தங்களை
கேட்டு ரசித்தேன்...

உன் சிரிப்பினை
நான் கேட்குமுன்...

அர்த்தமில்லாத
என் வாழ்வினை...

அர்த்தமாகினாய்...

என் வாழ்வில்
நீ வந்து...

வெற்று காகிதமாய்
நான் இருந்தேன்...

விலை உயர்ந்த
காகிதமாக்கினாய்...

காதல் தந்தாய்...

என் வாழ்வில் வருவாய்யென
நினைத்தேன்...

விட்டு சென்றாயடி
வீதியில் என்னை...

நான் விரும்புகிறேன்
உன்னை அல்ல...

என்னை சுட்டெரிக்க
காத்திருக்கும் கதிரவனை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Mar-14, 9:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 231

மேலே