கானல் நீருக்குள் தாகங்கள் தேடி

கவிதைக்குள் ஓவியம் வரைந்தான்
- பிரம்மன்
கன்னியர் முகத்தில் சிரிப்பை வரைந்தான் - ஆண்கள்
கண்களுக்குள் ரசனையை விதைத்தான் - அவர்களை
கலா ரசிகராய் மாற்றியே சிரித்தான்.....!!
கனிகளுக்குள்ளே இனிப்போ இது ? என்
கருத்துக்குள்ளே தமிழோ இது ? இவள்
சிரிப்புக்குள்ளே மல்லிகை பாணமோ ? என்
சிந்தனை கொயயவே மன்மத வேஷமோ ?!
என்றெண்ணி உறங்க முயல்கிறேன்
என் இமைக்குடைக்குள்ளும்
அவள் லிப்ஸ்டிக் வண்ணம்
எழுந்தமர்ந்து அவளை நினைக்கிறேன் - அடடா
என் இதயத் துடிப்பிலும்
இனிய இச் இச் சத்தம்.......!!
கட்டிலுக்கும் காது புளித்தது - காரணம்
கண்டபடி காதல் உளறல்......
கட்டை அது வேகும்போதும் - உடையும்
கனல் அதற்குள் ஆசைப் பதறல்.....
சட்டென்றே ஞானி போலாகிறேன் - மறுநொடி
சந்தோசமாய் காதலை நினைக்கிறேன்...
காதல் பைத்தியமாக்கும் என்றே
கருத்தில் தெளிகிறேன்........!
தெளிந்தும் குழம்புகிறேன்.....இன்னும்......
தெரிவது அங்கே - என் மங்கிய விழியில்......
அவளா...?
அவளா...?
அவளா...?
என்ன தாத்தா தேடுகிறீர்கள் ?
என்று பேரன் வந்து கேட்டான்.......
டேய்....பேராண்டி.......
தாத்தாவோட கண்ணாடிய எங்கேயாச்சும்
பார்த்தியா.....? என்றபடி
மறுபடி என் முகமூடியை அணிந்து கொள்கிறேன்
வழக்கம்போல........