ஓ மனிதா

ஓ மனிதா!

அகிலம் போற்றும் அன்னை தெரேசாவாக இருக்க வேண்டாம்-ஆனால்
அண்டை வீட்டுக்கு உதவிடும் நல்ல மனிதானக இருந்துவிடு!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிடும் வள்ளலாராக இருக்க வேண்டாம்-ஆனால்
வாடிய மனிதனை மீண்டும் வதைக்காமல் இருந்துவிடு!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியாக இருக்க வேண்டாம்-ஆனால் பிறர்க்கு
தொல்லை கொடுக்காத நல்ல நண்பனாக இருந்துவிடு!

மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனாக இருக்க வேண்டாம்-ஆனால்
எளியவனின் துயிலுக்கு சேதம் தராமல் இருந்துவிடு!

தேசம் போற்றும் மகானாக இருக்க வேண்டாம்-ஆனால்
தாய் போற்றும் நல்ல மகனாக இருந்துவிடு!

எழுதியவர் : திலகா (24-Mar-14, 1:51 pm)
சேர்த்தது : திலகா
Tanglish : o manithaa
பார்வை : 90

மேலே