பயணத் துளிகள்

ஆறு கை
நாலு கால் வீரன்
உயர்மின் கம்பிதாங்கி..!!

***

அன்றுமட்டும்
அந்த வீதி
சுத்தமாய் இருந்தது
மந்திரி வருகை..!!

***

எதிர்மறை
ஓட்டம் கொண்ட
வறண்ட ஆறு
நெடுஞ்சாலை..!!

***

வருவோர் போவோர்க்கு
டாடா காமிகின்றன
பச்சை மர இலைகள்..!!

***

என்னோடு
பயணிக்க மறுக்கின்றது
எதிர் காற்று..!!

***

குடைக்குள்
வெளிச்சம்
தெருவிளக்கு..!!

***

பொறுமை
இல்லாத எருமை
கத்துகின்றது பின்னே..!!

***

நமக்கு நாமே
வடிவமைக்கும் பயணம்
வாழ்க்கை..!!

எழுதியவர் : வெ கண்ணன் (27-Mar-14, 8:23 pm)
பார்வை : 541

மேலே