இவ தாண்டா பத்தினி
இவதாண்டா பத்தினி ..
டாக்டர், ஒருவரின் உடம்பை பரிசோதித்துவிட்டு, "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க" என்று சொல்லி அனுப்புகிறார்.
மாலை 5 மணி :
கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன்.; துடித்தாள் மனைவி.
.
எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா,இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி :
ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி :
நல்ல பசும்பால்ல, உன் கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு.!
இரவு 12 மணி :
தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க. காலையிலே எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாடு புக் பண்ணனும்.
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்லே !