நெடு நாள் வாடை

நெடு நல்வாடை படித்த நமக்கு
நெடு நாள் வாடைத் தெரிய
நகரப் பேருந்து நிலையம் போதும்
ஊர்களின் பெயர்கள் தான் வெவ்வேறு
வீசிடும் மூத்திர வாடை ஒன்றே!
காட்டான் என்று சொல்லும்
கிராமத்தான் வெட்கி, தயங்கி
ஒதுக்குப்புறம் தேடுகிறான்
படித்த பண்டிர்களாய் காட்டிக் கொடுக்கும்
பக்கிகள் தான்
வெட்கம் சிறிதுமின்றி
மாடர்ன் ஆர்ட் வரைகிறார்கள்
பேருந்து நிலைய சுவர்களில்
சிறு நீர் சித்திரங்கள் _என்று
நாமகரணம் சூட்டிடலாம்
வெற்றிலை குதப்பிய எச்சில்கள்
தூக்கி வீசிய
பிளாஸ்டிக் குப்பைகள்
சங்கீதம் பாடும் கொசுக்கள்
ரீங்காரமிடும் ஈக்கள்
குடல் பிடுங்கும் நாற்றம்
அந்த நெடு நாள் வாடை
மாறாத சாபம்..!