அன்னை

அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....

எழுதியவர் : இளவழுதி வீரராசு (11-Apr-14, 7:26 am)
Tanglish : annai
பார்வை : 293

மேலே