என்னவளே எங்கிருக்கிறாய் 02

என்னவளே எங்கிருக்கிறாய் ...? 02
---------------------------------------------------
நம்
நாட்டு யுத்தம் பலகோடி
சொத்தை அழித்தது ...!!!
விலைமதிக்க முடியாத
நம் உறவுகளை கொண்டு
சென்றது ,,,,,!!!

என்னை போல் உயிரோடு
இருக்கும் காதலர்களின்
மனவலியை யாரிடமும்
சொல்ல முடியாமலும்
சொல்ல இயலாமையாலும்
துடிக்கும் காதல் இதயங்களே
வாருங்கள் நாம் கவிதையால்
காதலிப்போம் ....!!!

என்னதான் யுத்த அழிவு
வந்தாலும் ...
உடமைகளும் உறவுகளும்
அழிந்ததே தவிர - என்
உணர்வுகள் அழியவில்லை
தமிழ் மீதான பற்று அதிகரிக்குதே
தவிர ஒரு துளி கூட அழியவில்லை
விஷமும் ஆகாது ....!!!
உயிரே உன் நினைவைபோல் ...!!!

என்னவளே எங்கிருக்கிறாய் ...?
நீ எனக்கு கிடைக்கும் வரை
என் கவிதை தொடரும் ...
எனக்கு ஒரே ஒரே ஏக்கம் ..?
நீ உயிரோடு இருக்கிறாயா ...?

தொடரும் .....!!! தொடரும்

எழுதியவர் : கே இனியவன் (15-Apr-14, 8:55 am)
பார்வை : 242

மேலே