+++எனை விட்டு செல்லாதே+++

உனது முகத்தில்
ஏன் இந்த
பதட்டம்
கண்ணே எனது அருகில்
நீ இருக்கும்போது................!

எனது இதயம்
என்றுமே உன்னை
நினைக்கிறது உறங்காமல்
துடிக்கிறது..................!

எனது நினைவு
மறவாமல் உன்னை
துரத்துகிறது நீ எங்கே
என்று
அனுதினமும்
கேட்கிறது..............!

என்னை
யாரால் தான் சமாதானம்
செய்திட
முடியும்
உன்னை தவிர..........?

எதற்கும்
தயக்கம் இல்லை எதை
கண்டும்
நடுக்கமில்லை..........!

எனது
நடுக்கமெல்லாம்
அன்பே நீ
என்னை விட்டு பிரிந்து
சென்றுவிடுவாயோ
என்பது தான்............!

எழுதியவர் : லெத்தீப் (16-Apr-14, 1:05 pm)
பார்வை : 138

மேலே